வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Wednesday, June 23, 2010

என் உயிர் சினேகிதி நீயோ....

பூவிதழ்மேல் பனித்துளி பனித்துளி

போன்றோ – உன் காதல் எனக்கு
பூவினில் ததும்பும் சுவைத்தேனும் நீயோ

இதமான நீலச்சுடரோ நிலவோ
யாழிசையும் நீயோ
உன் சிரிப்போ இசையோ சலங்கையொழியோ

அன்பே அன்பே நீயோ ஒரு பார்வை பார்த்தாயோ
அன்றே அன்றே நானோ சிறகின்றி பறந்தேனோ
ஒளியோ வளியோ நீயோ என் உயிர் சினேகிதி நீயோ

கால் நிமிடம் சிரித்தாயோ
யுகம் முழுதும் கண்டேனோ
சிறு சிறு சொற்முத்திரையோ
ஆழ் மனதில் பதித்தேனோ
உன்னிடத்து மௌனம் ஒன்றோ
ஒரு கவிதைப் பூச்சரமோ

பூவிதழ்மேல் பனித்துளி பனித்துளி

போன்றோ – உன் காதல் எனக்கு
பூவினில் ததும்பும் சுவைத்தேனும் நீயோ

ம.தீபா